E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0592/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி எஸ். எம். எம். முஸ்ஸாரப், பா.உ.

    1. 592/2020

      கௌரவ எஸ். எம். எம். முஸ்ஸாரப்,— இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் விளையாட்டுத் துறைக்கு பங்களிப்பு வழங்கிய பல விளையாட்டு வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொத்துவில் பிரதேசத்திற்கு நீண்டகாலமாக ஒரு பொது விளையாட்டு மைதானம் இல்லாததால் பிரதேசத்தின் இளைஞர்களும் யுவதிகளும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதை அவர் அறிவாரா?

      (ஆ) (i) ஆமெனில், பொத்துவில் பிரதேசத்திற்கு ஒரு பொது விளையாட்டு மைதானத்தை அமைக்கும் திகதி யாதென்பதையும்;

      (ii) இதற்காக கடந்த காலத்தில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-02-11

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி எஸ். எம். எம். முஸ்ஸாரப், பா.உ.

அமைச்சு

இளைஞர் மற்றும் விளையாட்டு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-02-11

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks