07

E   |   සි   |  

  1. 57 ஆம் அல்லது 51(3)(அ) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஒரு சட்டமூலம் அல்லது மாகாண சபை தொடர்பாக உத்தேசிக்கப்பட்ட நியதிச் சட்டமொன்று அல்லது 53 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் தனியார் உறுப்பினரின் சட்டமூலமொன்று சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும்பொழுது, நிரந்தர உறுப்பினர்களுக்கு மேலதிகமாகப் பதினைந்து ஏனைய உறுப்பினர்கள் சபாநாயகரினால் பெயரிடப்படுவார்கள். சட்டமூல அலுவலகமானது அரச தரப்பிலிருந்து எட்டு உறுப்பினர்களது பெயர்களையும் எதிர்க் கட்சியிலிருந்து ஏழு உறுப்பினர்களது பெயர்களையும் கோரிப் பெற்று இவற்றைப் பாராளுமன்றத்திற்கு அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
  2. குழுக் கூட்டத்திற்கென ஒரு திகதி நிர்ணயிக்கப்பட்டதன் பின்பு, சட்டமூல அலுவலகமானது குழுவின் சகல உறுப்பினர்களுக்கும் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கும் உத்தேசிக்கப்பட்ட சட்டமூலம் தொடர்பாக ஏதாவது திருத்தங்கள் இருப்பின் அவற்றை முன்கூட்டியே தெரிவிப்பதற்குமான வேண்டுகோளை விடுக்கும் கடிதமொன்றை அனுப்பி வைக்கும். குழுவின் உறுப்பினர்களுக்கு மேலதிகமாக சட்ட மா அதிபர், சட்ட வரைஞர், சம்பந்தப்பட்ட அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் குழுவிற்கு அழைக்கப்படுவார்கள்.
  3. 113 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் நிலையியற் குழுவில் சட்டமூலமானது பரிசீலிக்கப்பட்டதன் பின்பு, அல்லது 100 முதல் 110 வரையான நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் தெரிகுழுவில் பரிசீலிக்கப்பட்டதன் பின்பு, சட்டமூல அலுவலகமானது உத்தேசிக்கப்பட்ட திருத்தங்கள் மற்றும் குழுவில் உடன்பட்ட விடயங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் குழு அறிக்கையொன்றினைத் தயாரிக்க வேண்டியுள்ளதுடன் மேலதிகமாக குழுவின் கூட்ட அறிக்கையையும் மூன்று மொழிகளிலும் ஒத்துப் பார்த்துத் தயாரிப்பதுடன், 68, 69, 70 ஆம் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் அச்சிடுவதற்கும் பாராளுமன்றச் சபாபீடத்தில் சமர்ப்பிப்பதற்குமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks