பார்க்க

E   |   සි   |  



சமீபத்திய செய்திகள்

அக்டோபர் 22, 2025

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழற்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி; வரிக் கொள்கை, விவசாய உற்பத்தித்திறன் மற்றும் கடுமையான மதுவரிச் சேகரிப்புக் குறித்தும் அறிவுறுத்தல்

கௌவர பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் (ஒக். 21) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில், 2025ஆம் ஆண்டு பெரும் போகத்தில் உள்நாட்டு விவசாயிகள் சிறந்த விலையைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில்  2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2451/10 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளை குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. விசேட பண்ட வரியை இரத்துச் செய்வது தொடர்பான திட்டம் இருந்தாலும் ஊழலுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் இருந்தபோதிலும், உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்து அதைப் பயன்படுத்துகிறது என்பது இங்கு குறிப்பிடப்பட்டது. இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோவிற்கு ரூ. 10 (ரூ. 40 முதல் ரூ. 50 வரை) மற்றும் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் ஒரு கிலோவிற்கு ரூ. 20 (ரூ. 60 முதல் ரூ. 80 வரை) அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஓகஸ்ட் 26, 2025 முதல் அமலுக்கு வருகிறது. இலங்கையின் வரிக்கட்டமைப்பு ஸ்திரமானதாகவும், எளிமையானதாகவும், வெளிப்படைத் தன்மை மிக்கதாகவும், வர்த்தகர்களால் கணிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு வர்த்தக அமைச்சுக்கும், நிதி அமைச்சுக்கும் தற்போதுள்ள சட்டங்களை தேசிய வரிக் கொள்கையுடன் ஒருங்கிணைத்து விரிவாக நடைமுறைப்படுத்துமாறு குழு பரிந்துரைத்தது. 2027 முதல் 2030 வரையிலான கடுமையான நான்கு-வரிசை இறக்குமதி வரி திருத்தம் மற்றும் பாரா கட்டணங்களைப் படிப்படியாக நீக்குதல் உள்ளிட்ட முன்மொழியப்பட்ட வரி மறுசீரமைப்புக்களின் தாக்கங்கள் குறித்த முழுமையான மதிப்பீட்டை நடத்துமாறும் குழு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. 2026 மார்ச் மாத இறுதிக்கு முன்னர் இதன் முன்னேற்றத்தை அறிவிக்குமாறும் குழு வலியுறுத்தியது. பருவகாலத்திற்கான வரிகளில் தங்கியிருக்காது, ஐந்து வருட காலத்திற்குள் ஒட்டுமொத்த பெரிய வெங்காயத்தின் அறுவடையை அதிகரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழு, கமநலத் திணைக்களத்திற்குப் பரிந்துரைத்தது. "பிரபாஷ்வர" போன்ற ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் களஞ்சியங்கள் மூலம் கொள்முதல்  ஒப்பந்தங்கள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்கும் விவசாயிகளுக்கு விலைகளை நிலைப்படுத்துவதற்கும் எதிர்கால ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பரந்த உத்தியின் ஒரு பகுதியாக இது இருக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது. மேலும், மதுவரி உற்பத்திக்கான வரிக் கொடுப்பனவுடன் தொடர்புபட்ட மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான (அத்தியாயம் 52) விதிகள் குறித்தும் குழு மதிப்பாய்வு செய்ததுடன் அனுமதி வழங்கியது. இந்தப் புதிய விதிகள் பணம் செலுத்தாதவர்களின் உற்பத்தியை 30 நாட்களின் பின்னரும், விநியோகத்தை 90 நாட்களின் பின்னரும் நிறுத்தும். புதிய விதிகள் 30 நாட்களுக்குப் பிறகு பணம் செலுத்தாதவர்களின் உற்பத்தியை நிறுத்தும் மற்றும் 90 நாட்களுக்குப் பிறகு அனைத்து விநியோகம் மற்றும் விற்பனையையும் நிறுத்தும். தற்பொழுது காணப்படும் முறைக்கு அமைய பணம் செலுத்தாதவர்களிடமிருந்து  3% வட்டி அபராதம் விதிக்கப்படுகின்றமை போதுமானதாக இல்லையென்பதால் குறித்த விதி பண அறவீட்டுக்கான அமுலாக்கத்தை வலுப்படுத்துவதாக அமைகின்றது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, அர்கம்  இலியாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, சித்ரால் பெர்னாந்து, (சட்டத்தரணி) விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரக்கேன், சம்பிக்க ஹெட்டிஆரச்சி மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.எ.விமலேந்திரராஜா, வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்ளைககள் திணைக்களம், மதுவரித் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அக்டோபர் 22, 2025

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழற்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி; வரிக் கொள்கை, விவசாய உற்பத்தித்திறன் மற்றும் கடுமையான மதுவரிச் சேகரிப்புக் குறித்தும் அறிவுறுத்தல்

கௌவர பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் (ஒக். 21) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில், 2025ஆம் ஆண்டு பெரும் போகத்தில் உள்நாட்டு விவசாயிகள் சிறந்த விலையைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில்  2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2451/10 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளை குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. விசேட பண்ட வரியை இரத்துச் செய்வது தொடர்பான திட்டம் இருந்தாலும் ஊழலுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் இருந்தபோதிலும், உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்து அதைப் பயன்படுத்துகிறது என்பது இங்கு குறிப்பிடப்பட்டது. இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோவிற்கு ரூ. 10 (ரூ. 40 முதல் ரூ. 50 வரை) மற்றும் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் ஒரு கிலோவிற்கு ரூ. 20 (ரூ. 60 முதல் ரூ. 80 வரை) அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஓகஸ்ட் 26, 2025 முதல் அமலுக்கு வருகிறது. இலங்கையின் வரிக்கட்டமைப்பு ஸ்திரமானதாகவும், எளிமையானதாகவும், வெளிப்படைத் தன்மை மிக்கதாகவும், வர்த்தகர்களால் கணிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு வர்த்தக அமைச்சுக்கும், நிதி அமைச்சுக்கும் தற்போதுள்ள சட்டங்களை தேசிய வரிக் கொள்கையுடன் ஒருங்கிணைத்து விரிவாக நடைமுறைப்படுத்துமாறு குழு பரிந்துரைத்தது. 2027 முதல் 2030 வரையிலான கடுமையான நான்கு-வரிசை இறக்குமதி வரி திருத்தம் மற்றும் பாரா கட்டணங்களைப் படிப்படியாக நீக்குதல் உள்ளிட்ட முன்மொழியப்பட்ட வரி மறுசீரமைப்புக்களின் தாக்கங்கள் குறித்த முழுமையான மதிப்பீட்டை நடத்துமாறும் குழு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. 2026 மார்ச் மாத இறுதிக்கு முன்னர் இதன் முன்னேற்றத்தை அறிவிக்குமாறும் குழு வலியுறுத்தியது. பருவகாலத்திற்கான வரிகளில் தங்கியிருக்காது, ஐந்து வருட காலத்திற்குள் ஒட்டுமொத்த பெரிய வெங்காயத்தின் அறுவடையை அதிகரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழு, கமநலத் திணைக்களத்திற்குப் பரிந்துரைத்தது. "பிரபாஷ்வர" போன்ற ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் களஞ்சியங்கள் மூலம் கொள்முதல்  ஒப்பந்தங்கள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்கும் விவசாயிகளுக்கு விலைகளை நிலைப்படுத்துவதற்கும் எதிர்கால ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பரந்த உத்தியின் ஒரு பகுதியாக இது இருக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது. மேலும், மதுவரி உற்பத்திக்கான வரிக் கொடுப்பனவுடன் தொடர்புபட்ட மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான (அத்தியாயம் 52) விதிகள் குறித்தும் குழு மதிப்பாய்வு செய்ததுடன் அனுமதி வழங்கியது. இந்தப் புதிய விதிகள் பணம் செலுத்தாதவர்களின் உற்பத்தியை 30 நாட்களின் பின்னரும், விநியோகத்தை 90 நாட்களின் பின்னரும் நிறுத்தும். புதிய விதிகள் 30 நாட்களுக்குப் பிறகு பணம் செலுத்தாதவர்களின் உற்பத்தியை நிறுத்தும் மற்றும் 90 நாட்களுக்குப் பிறகு அனைத்து விநியோகம் மற்றும் விற்பனையையும் நிறுத்தும். தற்பொழுது காணப்படும் முறைக்கு அமைய பணம் செலுத்தாதவர்களிடமிருந்து  3% வட்டி அபராதம் விதிக்கப்படுகின்றமை போதுமானதாக இல்லையென்பதால் குறித்த விதி பண அறவீட்டுக்கான அமுலாக்கத்தை வலுப்படுத்துவதாக அமைகின்றது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, அர்கம்  இலியாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, சித்ரால் பெர்னாந்து, (சட்டத்தரணி) விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரக்கேன், சம்பிக்க ஹெட்டிஆரச்சி மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.எ.விமலேந்திரராஜா, வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்ளைககள் திணைக்களம், மதுவரித் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அக்டோபர் 22, 2025

மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கி இளஞ்சிவப்பு நிறமாக மாறிய பாராளுமன்றம்

உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அல்லது இளஞ்சிவப்பு மாதமாகக் கருதப்படும் ஒக்டோபர் மாதத்தில் இந்த விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோருக்கு  மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டலுக்கான சின்னம் மற்றும் கைப்பட்டி அணிவிக்கும் நிகழ்வு இன்று (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.  பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர, ஆளும் கட்சியின் முதற்கோலாசான், கௌரவ அமைச்சர் (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ, கௌரவ எதிரிக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கௌரவ எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக ஆகியோருக்கு சின்னங்களும், கைப்பட்டிகளும் அணிவிக்கப்பட்டன. அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் நுழைவாயில் பகுதியில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வூட்டும் வகையிலான சின்னமும், கைப்பட்டியும் அணிவிக்கப்பட்டன. அத்துடன், ஒன்றியத்தினால் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோருக்கும் சின்னமும், கைப்பட்டியும் அணிவிக்கப்பட்டன. இன்றையதினம் இந்நிகழ்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி பாராளுமன்ற பணியாளர்களும் இளஞ்சிவப்பு நிறத்திலான ஆடையணிந்து வருகை தந்திருந்தனர். அத்துடன், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மார்பகப் புற்றுநோய் ஒழிப்புக் குறித்த விழிப்புணர்வூட்டல் தொடர்பில் பி.ப 4.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையும் விவாதிக்கப்படவுள்ளது. உலகம் முழுவதிலும் பெண்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் காணப்படுகிறது. இதற்கு அமைய இலங்கையில் நாளாந்தம் 15 புதிய  நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் இதில் மூவர் உயிரிழப்பதாகவும் இங்கு கருத்துத் தெரிவித்த வைத்தியர்கள் தெரிவித்தனர். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் மார்பகப் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்றும், இதற்காக 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மாதத்திற்கு ஒரு முறை சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர் அதன்படி, ஒக்டோபர் மாதத்தில் மட்டுமல்ல, இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், இந்த சமூகப் பேரழிவை ஒழிக்க வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உள்ளது என்பதும் வலியுறுத்தப்பட்டது. பாடசாலை மட்டத்தில் இது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், இளஞ்சிவப்பு புதன்கிழமை (Pink Wednesday) என்ற பெயரில் பல்வேறு தரப்பினரின் ஒருங்கிணைப்புடன் நாட்டில் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். பாராளுமன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக, அனைத்துப் பாடசாலைகளினதும் காலைக் கூட்டங்களில் இவ்விடயம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்ட பாடசாலை அதிபர்களின் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஒன்றியத்தினால் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், ஏனைய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் ஸ்ரீனி அழகப்பெரும, விசேட வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாந்து, இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் லங்கா ஜயசூர்ய திசாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

அக்டோபர் 22, 2025

நுண் நிதிக் கடன்களை மீளச் செலுத்த முடியாதவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

நுவரெலியா, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் நுண் நிதிக் கடன்களை மீளச்செலுத்த முடியாதவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்ஹ அவர்களின் தலைமையில் அண்மையில் (10) கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.  நாடு முழுவதிலும் நுண் நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்டவர்களின் நிலுவைத் தொகை உள்ளிட்ட தகவல்களைத் திரட்டுவதற்கு முன்னோடியாக நுவரெலியா, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் முறையே ஹட்டன், கோரளைப்பற்று தெற்கு, வெலிக்கந்தை மற்றும் வெள்ளவத்தை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் தரவுகளைச் சேகரிக்கத் திட்டமிட்டிருப்பதாக உபகுழுவின் தலைவர் தெரிவித்தார். இதற்கு அமைய தகவல்களைத் திரட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கினார்.  நுண் நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பது அல்லது அவர்களை அந்தப் பிரச்சினையிலிருந்து மீட்டு எடுப்பதற்கான தலையீட்டை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் மேலும் கலந்துரையாட நுண் நிதிக் தொழில்துறையினர் சங்கத்தில் புதிவுசெய்யப்பட்ட 34 நிறுவனங்களையும் அழைத்துக் கலந்துரையாடலை நடத்துவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.  இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சி.எஸ் சத்துரி கங்கானி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) அனுஷ்கா திலகரத்ன, சுனில் ரத்னசிறி ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அக்டோபர் 21, 2025

'பளிங்கு ரேண' பாராளுமன்றத்தில்

2025 இலக்கிய மாதத்துடன் இணைந்ததாக பாராளுமன்ற கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'பளிங்கு ரேண' (Wingfield Family) மேடை நாடகம் 2025.10.23 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகிலுள்ள வைபவ மண்டபத்தில் பி.ப. 6.30 மணிக்கு அரங்கேற்றப்படவுள்ளது.  இந்த 'பளிங்கு ரேண' மேடை நாடகம் அமெரிக்காவின் பிரபல நாடக ஆசிரியர் டென்னிசி வில்லியம்ஸின் The Glass Menagerie எனும் சிறந்த தரத்திலான மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.  இலங்கை நாடக ஆசிரியர் ஹென்றி ஜயசேன அவர்களினால் சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு எழுதப்பட்ட இந்த 'பளிங்கு ரேண' மேடை நாடகம், பூஜித்த டி மெல் அவர்களினால் இயக்கப்பட்டுள்ளது. சாந்தணி செனவிரத்ன, ஸ்செவியர் கனிஷ்க, மனுஷி டானியா, பிம்சர சில்வா ஆகிய கலைஞர்களின் பங்களிப்புடன் இந்த மேடை நாடகம் அரங்கேற்றப்படும்.  இந்நிகழ்வில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.






சபை அலுவல்கள்




அனைத்தும்  

அக்.

23

பாராளுமன்ற நாட்காட்டி

அமர்வு நாட்கள்

முழு நாட்காட்டி

செய்திமடல்களுக்கு பதிவு செய்யவும்







பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks