E   |   සි   |  

பாராளுமன்ற அலுவல்கள் பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 22 இன் பிரகாரம் பின்வரும் ஒழுங்குமுறையில் நடாத்தப்படுதல் வேண்டும்.

காண்க

புதிய உறுப்பினர்ைைின் பதவிச் சத்தியம் அல்லது உறுதியுகர

சத்தியப்பிரமாணம் அல்லது உறுதிப்பிரமாணம்இது கௌரவ சபாநாயகரினால் நடத்தி வைக்கப்படும்.

சனாதிபதியின் சசய்திைள

ஜனாதிபதியிடமிருந்து வந்த செய்திகள் கௌரவ சபாநாயகரால் அல்லது பிரதிச் சபாநாயகரால் அல்லது குழுக்களின் பிரதித் தவிசாளரால் அல்லது தலைமைதாங்கும் உறுப்பினரால் வாசிக்கப்படும்.

சபாநாயைாின் அறிவித்தல்ைள

சட்ட மூலங்கள் பற்றிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள், சட்ட மூலங்களின் உறுதிப்படுத்தல், பாராளுமன்ற உறுப்பினர்களின் மரணம், தவிசாளர் குழாமில் உள்ள உறுப்பினர்களின் பெயர்கள், குழுக்களின் நியமனம் போன்ற பாராளுமன்றத்துடன் தொடர்புடைய அனைத்து விடயங்கள் பற்றிய அறிவித்தல்களும் கௌரவ சபாநாயகரால் மேற்கொள்ளப்படும்.

பத்திரங்ைள் சமர்ப்பித்தல

கௌரவ சபாநாயகரால் அல்லது ஓர் அமைச்சரால் அல்லது ஒரு பிரதி அமைச்சரால் மட்டுமே பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட முடியும்.

குழுக்ைைின் அறிக்கைைள் சமர்ப்பித்தல

பாராளுமன்றக் குழுக்களின் அறிக்கைகளை அந்தந்தக் குழுக்களின் தவிசாளர் சமர்ப்பிப்பார். ஆலோசனைக் குழுக்களின் அறிக்கைகள் அந்தந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் சமர்ப்பிக்கப்படலாம்.

சபாது மனுக்ைள் சமர்ப்பித்தல

பிரசைகள் தமது நிருவாக ரீதியான இடர்ப்பாடுகளுக்குப் பரிகாரம் தேட, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரூடாகப் பாராளுமன்றத்திற்கு மனுக்கள் சமர்ப்பிக்கலாம். அவ்வாறான மனுக்கள் பரிசீலனைக்காகப் பொது மனுக்கள் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.

வாய்மூல விகடக்ைான வினாக்ைள

கேள்வி நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதம அமைச்சரிடமோ அல்லது யாரேனும் ஓர் அமைச்சரிடமோ பொது விடயங்கள் தொடர்பாக குறித்த அமைச்சின் கீழ்வரும் விடயங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் வாய்மூல வினாக்களை முன்வைக்கலாம். உறுப்பினர் ஒருவர் நாளொன்றுக்கு மூன்று வாய்மூல வினாக்களை மட்டுமே கேட்கமுடியும். வினாவுக்கான நேரம் பி.ப. 01.00 முதல் பி.ப. 02.00 வரையாகும்.

சமுைமைிக்ைாதிருப்பதற்கு அனுமதி சைாரும் பிசரரகைைள

தொடர்ச்சியாக மூன்று மாத காலத்திற்கு விடுப்பை வேண்டும் யாரேனும் ஓர் உறுப்பினர் அதற்கான சபையின் அனுமதியைப் பெறவேண்டும். அரசியலமைப்பின் உறுப்புரை 66(ஊ) இன் கீழ், சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதி கோரும் பிரேரணையொன்று குறித்த உறுப்பினரின் வேண்டுகோளின் பேரில் யாரேனும் ஓர் உறுப்பினரால் சபையில் பிரேரிக்கப்படலாம். இப்பிரேரணை அமைச்சர் ஒருவரால் சபையில் பிரேரிக்கப்படாதவிடத்து, வழிமொழியப்படல் வேண்டும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks