E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1639/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மிலான் ஜயதிலக்க, பா.உ.

    1. 1639/2023

      கௌரவ மிலான் ஜயதிலக்க,— வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     பின்னவல யானைகள் சரணாலயத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் யாவை என்பதையும்;

                 (ii)    மேற்படி அபிவிருத்திப் பணிகள் நிறைவு செய்யப்படும் திகதி யாது என்பதையும்;

      (iii) சுற்றுலாப் பயணிகளை கவரும் பொருட்டு அந்நிறுவனத்தின் இணையத்தளம் இற்றைப்படுத்தப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) 2020ஆம் ஆண்டு தொடக்கம் இது வரை  மேற்படி சரணாலயத்தை பார்வையிட வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை;

      (ii) மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் மேற்படி சரணாலயத்தின் வருமானம்;

      ஒவ்வொரு வருடத்தின் அடிப்படையில் தனித்தனியே யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2023-08-10

கேட்டவர்

கௌரவ மிலான் ஜயதிலக்க, பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks