E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2691/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, பா.உ.

    1. 2691/2023

      கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) விவசாயிகளினால் விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகளினதும் களைநாசினிகளினதும் விலை மிக உயர்வாக உள்ளது என்பதையும்;

      (ii) அவை சரியான தரத்தில் இல்லை என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) கிருமி நாசினிகள் மற்றும் களை நாசினிகளை இறக்குமதி செய்யும்போது ஒழுங்குறுத்துகைப் பணிகள் மேற்கொள்ளப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (ii) அவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (iii) கிருமி நாசினிகள் மற்றும் களை நாசினிகளின் பயன்பாடு தொடர்பில் விவசாய வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஊடாக விவசாயிகளை விழிப்புணர்வூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      (iv) விவசாய இரசாயனப் பொருட்களை இந்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-24

கேட்டவர்

கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks