E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3334/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார், பா.உ.

    1. 3334/2023

      கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் உள்ள அரசாங்க பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை, அவற்றின் பெயர்கள் மற்றும் அப் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள பீடங்களின் பெயர்கள் தனித்தனியாக யாவையென்பதையும்;

      (ii) மேற்படி பல்கலைக்கழகங்களில் நிலவும் விரிவுரையாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) இலங்கைப் பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனரா என்பதையும்;

      (ii) அவ்வாறாயின், எதிர்காலத்தில் அவ்வாறான இடம்பெயர்வுகளைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-07

கேட்டவர்

கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks