E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0008/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

    1. 8/2024

      கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை மின்சார சபையில் பணிபுரியும் நிரந்தர, ஒப்பந்த மற்றும் அமய ஊழியர்களின் எண்ணிக்கை தனித்தனியே யாதென்பதையும்;

      (ii) மேற்படி ஊழியர்களுக்கு 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை சம்பளம், படிகள் மற்றும் மிகை ஊதியமாக செலுத்தப்பட்டுள்ள தொகை ஆண்டுவாரியாக தனித்தனியாக யாதென்பதையும் ;

      (iii) மின்கம்பிகளை இழுத்தல், குழிகளைத் தோண்டுதல் மற்றும் மின் இணைப்பைத் துண்டித்தல் போன்ற பணிகள் ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (iv) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மேற்படி நிறுவனங்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தொகை ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;

      (v) இலங்கை மின்சார சபையில் மிகை ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கத்தக்கதாக மற்றும் இவர்களுக்கு அதிக சம்பளம், படிகள் மற்றும் மிகையூதியம் செலுத்தப்படும் நிலையில், மேற்படி (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாய் அமைந்த காரணிகள் யாவையென்பதையும்;

      (vi) அந்த நிலைமையை சரிசெய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-07

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks