பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
8/2024
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை மின்சார சபையில் பணிபுரியும் நிரந்தர, ஒப்பந்த மற்றும் அமய ஊழியர்களின் எண்ணிக்கை தனித்தனியே யாதென்பதையும்;
(ii) மேற்படி ஊழியர்களுக்கு 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை சம்பளம், படிகள் மற்றும் மிகை ஊதியமாக செலுத்தப்பட்டுள்ள தொகை ஆண்டுவாரியாக தனித்தனியாக யாதென்பதையும் ;
(iii) மின்கம்பிகளை இழுத்தல், குழிகளைத் தோண்டுதல் மற்றும் மின் இணைப்பைத் துண்டித்தல் போன்ற பணிகள் ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iv) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மேற்படி நிறுவனங்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தொகை ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(v) இலங்கை மின்சார சபையில் மிகை ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கத்தக்கதாக மற்றும் இவர்களுக்கு அதிக சம்பளம், படிகள் மற்றும் மிகையூதியம் செலுத்தப்படும் நிலையில், மேற்படி (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாய் அமைந்த காரணிகள் யாவையென்பதையும்;
(vi) அந்த நிலைமையை சரிசெய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-02-07
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
வலுசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks