பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
64/2024
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தில், மண்முனை - தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கெவிலியாமடு, கோறளைப்பற்று - தெற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மயிலத்தமடு மற்றும் மண்முனை - மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை ஆகிய பிரதேசங்களில் சுமார் ஆறு இலட்சம் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகள் உள்ளதென்பதையும்;
(ii) ஆயினும், மேற்படி மேய்ச்சல் தரைகள், "கால்நடை மேய்ச்சல் தரைகள்" என இதுவரை வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி மேய்ச்சல் தரைகள், "கால்நடை மேய்ச்சல் தரைகள்" என வர்த்தமானியில் வெளியிடப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;
(ii) அது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2024-12-17
கேட்டவர்
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2024-12-17
பதில் அளித்தார்
கௌரவ சுசில் ரணசிங்ஹ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks