E   |   සි   |  

 திகதி: 2025-01-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0066/ 2025 - கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 66/2024

      கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தின், கோரளைப்பற்று – வடக்கு, வாகரை பிரதேச செயலகப் பிரிவில் சட்ட விரோதமாக இல்மனைட் அகழ்வு மேற்கொள்ளப் படுகின்றது என்பதையும்;

      (ii) இதன் காரணமாக அப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் குடிநீர் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படக் கூடுமென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) ஆமெனில், சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் இல்மனைட் அகழ்வுச் செயற்பாடுகளைத் தடை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-08

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2025-02-25

பதில் அளித்தார்

கௌரவ தம்மிக பட்டபெந்தி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks