E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0083/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

    1. 83/2024

      கௌரவ ரோஹண பண்டார,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை இன்றளவில் நடைமுறைப்படுத்தும் காப்புறுதி வகைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;

      (iii) மேற்படி ஒவ்வொரு காப்புறுதித் திட்டத்தாலும் காப்பீடு செய்யப்படும் பயிர் வகைகள் தனித்தனியே யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை பயிர்ச்சேதங்களுக்காக சபையால் செலுத்தப்பட்ட நட்டயீட்டுத் தொகை ஒவ்வொரு வருடத்தின் அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (ii) அச்சபைக்கு நிதி கிடைக்கப் பெறும் வழிமுறைகள் யாவையென்பதையும்;

      (iii) கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையை மேலும் வலுவூட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-07

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks