E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0091/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 91/2024

      கௌரவ சமிந்த விஜேசிறி,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கைச் சந்தையில் பாவனைக்குப் பொருந்தாத தரமற்ற தேங்காய் எண்ணெய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், தரமற்ற தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விநியோகிக்கப்படும் முறை யாதென்பதையும்;

      (iii) அதற்காகப் பயன்படுத்தப்படும் உத்திகள் யாவையென்பதையும்;

      (iv) அவற்றைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      (v) உயர் தரத்திலான தேங்காய் எண்ணெய் சந்தையில் விநியோகிக்கப்படாததற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தேங்காய் எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் யாவையென்பதையும்;

      (ii) மேற்படி பிரச்சினைகளுக்கான தீர்வுகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-05

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks