E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0123/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.

    1. 123/2024

      கௌரவ கிங்ஸ் நெல்சன்,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கல்விமாணி பட்டக் கற்கைநெறியை பயிலக் கூடிய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;

      (iii) மேற்படி பட்டக் கற்கை நெறியை பயில்வதற்காக வருடாந்தம் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iv) அதிகளவான பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு மேற்குறிப்பிட்ட பட்டக் கற்கை நெறியே காரணமாக அமைந்துள்ளது என்பதை அவர் அறிவாரா என்பதையும்;

      (v) ஆமெனில், அப்பட்டக் கற்கை நெறியை பயில்வதற்காக இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-07

கேட்டவர்

கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks