E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0236/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (செல்வி) சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர, பா.உ.

    1. 236/2024

      கௌரவ சட்டத்தரணி (செல்வி) லக்மாலி ஹேமச்சந்திர,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மருத்துவ வழங்கல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய தரப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் உரிய முறையில் தரவுத்தளம் பராமரிக்கப்படாமை காரணமாக மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு மருந்துகளின் விலையும் அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளதென்பதையும்;

      (ii) அந்த நிலைமை ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பின் இருப்புக்கு சவாலாக மாறியுள்ளதென்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) அரச சுகாதாரக் கட்டமைப்பின் மருந்துக் கையிருப்பு முகாமைத்துவம் தொடர்பாக கணினி மென்பொருள் கட்டமைப்பொன்று காணப்படுகின்றதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அது யாதென்பதையும்;

      (iii) அக்கட்டமைப்பு தொடர்ந்து இற்றைப்படுத்தப்படுகின்றதா என்பதையும்;

      (iv) மருந்துக் கொள்வனவுச் செயற்பாடு மற்றும் கையிருப்புகளை விநியோகிக்கும் செயற்பாடு அன்றாடம் மேற்பார்வை செய்யப்படுகின்றதா என்பதையும்;

      (v) அதற்கான பொறுப்பை வகிக்கின்றவர்கள் யாவரென்பதையும்;

      (vi) மேற்படி ஒட்டுமொத்தச் செயற்பாட்டில் அடையாளங் காணப்பட்டுள்ள முறைகேடுகளும் குறைபாடுகளும் யாவை என்பதையும்;

      (vii) அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-07

கேட்டவர்

கௌரவ (செல்வி) சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks