E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0250/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

    1. 250/2024

      கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) 2019 முதல் 2022ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் இலங்கையில் கோவிட்-19 நோயுடன் தொடர்புடையதாக —

      (i) ஆய்வுகூடத்தினால்-உறுதி செய்யப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை;

      (ii) உறுதி செய்யப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை;

      (iii) மரணித்தவர்களின் வயது, பால், வதிவிட மாகாணம் மற்றும் மாவட்டம், இனம் மற்றும் சமயம் அடிப்படையிலான மரணங்களின் எண்ணிக்கை விபரங்கள்;

      ஆகியவற்றை அவர் இச்சபைக்கு வெவ்வேறாக தெரிவிப்பாரா?

      (ஆ) 2019 முதல் 2022ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் இலங்கையில் கோவிட்-19 மரணங்களுடன் தொடர்புடையதாக —

      (i) சடலங்களை அகற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட முறை/கள்;

      (ii) தகனக்கிரியை மேற்கொள்ளப்பட்ட சடலங்களின் மொத்த எண்ணிக்கை;

      (iii) அடக்கம் செய்யப்பட்ட சடலங்களின் மொத்த எண்ணிக்கை;

      (iv) தகனக்கிரியை மற்றும் அடக்கம் செய்யப்பட்டவர்களின் வயது, பால், வதிவிட மாகாணம் மற்றும் மாவட்டம், இனம் மற்றும் சமயம் அடிப்படையிலான விபரங்கள்;

      ஆகியவற்றை அவர் இச்சபைக்கு வெவ்வேறாக தெரிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-23

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks