E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0251/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஜித் கிஹான், பா.உ.

    1. 251/2024

      கௌரவ அஜித் கிஹான்,— பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதிவாதிகளை இதுவரையில் சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு முடியாது போயுள்ளதென்பதையும்;

      (ii) மேற்படி தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி உட்பட பிரதிவாதிகளை மிக விரைவில் சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என காதினல் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஏனைய சமயத் தலைவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர் என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) ஆமெனில், மேற்படி தாக்குதலுடன் தொடர்புடைய பிரதிவாதிகளை சட்டத்தின் முன் கொண்டு வருதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மேற்படி தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-07

கேட்டவர்

கௌரவ அஜித் கிஹான், பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks