E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0257/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர, பா.உ.

    1. 257/2024

      கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) காலி மாவட்டத்தின் 'ஹோலுவகொட' அபிவிருத்திக் கருத்திட்டத்தின் தற்போதைய நிலைமை யாது;

      (ii) மேற்படி கருத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களின் பரப்பளவு எவ்வளவு;

      (iii) மேற்படி நிலங்களை விவசாய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதில் இன்றளவில் காணப்படுகின்ற தடைகள் யாவை;

      (iv) மேற்படி கருத்திட்டத்திற்காக இதுவரையில் செலவிடப்பட்டுள்ள தொகையுடன் ஒப்பிடுகையில், இக்கருத்திட்டத்திலிருந்து எதிர்பார்க்கப்பட்ட நன்மைகள் கிடைக்கப்பெற்றுள்ளனவா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-19

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks