பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
290/2024
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானத்திற்கு அமைவாக, "கோவிட் -19" பெருந்தொற்றினால் இறந்தவர்களின் சடலங்கள் மட்டக்களப்பு "மஜ்மா நகர்" பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதுடன், அதற்காக முப்படையினரின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்பட்டதை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி நல்லடக்கப் பணிகளுக்காக சேவை இணைப்புச் செய்யப்பட்டிருந்த ஒவ்வொரு படைப்பிரிவினதும் பதவிநிலை அலுவலர்கள் மற்றும் ஏனைய அலுவலர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) அவ்வலுவலர்களுக்கு அடிப்படைச் சம்பளத்திற்கு மேலதிகமாக செலுத்தப்பட்ட கொடுப்பனவு எவ்வளவு என்பதையும்;
(iv) மேற்படி நல்லடக்கப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட முப்படையினரின் வாகனங்கள் மற்றும் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(v) அவ்வொவ்வொரு வாகனத்திற்காகவும் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் செலவு வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(vi) மேற்படி நல்லடக்கப் பணிகளுக்காக இறந்தவர்களின் உறவினர்களிடமிருந்து பணம் அறவிடப்பட்டதா என்பதையும்;
(vii) ஆமெனில், அவ்வாறு அறவிடப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-02-07
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks