E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0302/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 302/2024

      கௌரவ ரவி கருணாநாயக்க,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) வருடாந்தம் அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளில் முதலாம் வகுப்பிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேலே குறிப்பிடப்பட்ட (i) இக்கு அமைவாக கடந்த ஐந்து ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) கடந்த மூன்று ஆண்டுகளில் க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சைகளுக்குத் தோற்றிய மற்றும் சித்தியடைந்த பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iv) மேலே குறிப்பிடப்பட்ட க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகளில் சித்தியடைந்து அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெற்று அனுமதி கிடைக்கப்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு வெவ்வேறாக அறிவிப்பாரா?

      (ஆ) (i) பல்கலைக்கழக அனுமதிக்காக தகுதிபெற்றிருந்தும் பல்கலைக்கழகங்களுக்குள் அனுமதி கிடைக்கப்பெறாத மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாதென்பதையும்;

      (ii) இலங்கையிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் பதிவுசெய்துகொண்ட அத்தகைய மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையுடன், கடந்த ஐந்து வருடங்களில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் மாணவர்களுக்காக மதிப்பிடப்பட்ட வருடாந்தச் செலவினை இலங்கை ரூபா மற்றும் ஐக்கிய அமெரிக்க டொலர்களில் யாதென்பதை வெவ்வேறாகவும்;

      (iv) கடந்த ஐந்து வருடங்களில் கல்விக்கான மொத்த ஒதுக்கீட்டுத் தொகை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் சதவீதம் யாதென்பதை வெவ்வேறாகவும்;

      அவர் இச்சபைக்கு மேலும் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-14

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks