E   |   සි   |  

 திகதி: 2025-09-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0314/ 2025 - கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 314/2024
      கௌரவ ரவி கருணாநாயக்க,— கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) சமுர்த்தி வங்கியின் வசமுள்ள சொத்துக்களின் தற்போதைய பெறுமதி யாதென்பதையும்;
      (ii) இலங்கையிலுள்ள சமுர்த்தி வங்கிகள் மற்றும் சமுர்த்தி மகா சங்கங்களின் எண்ணிக்கை யாதென்பதை வெவ்வேறாகவும்;
      (iii) அனைத்து சமுர்த்தி மகா சங்கங்கள் வசமுள்ள சொத்துக்களின் தற்போதைய பெறுமதி யாதென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) சமுர்த்தி வங்கிகள் இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் உள்ளனவா என்பதையும்;
      (ii) இல்லையெனின், அதன் கண்காணிப்பிற்கு உட்படாமைக்கான காரணங்கள் யாதென்பதையும்;
      (iii) சமுர்த்தி வங்கியின் பணிப்பாளர் சபையின் தலைவர் யார் என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) (i) கடந்த 10 வருடங்களில் சமுர்த்தி வங்கியினால் ஈட்டப்பட்ட இலாபம்/ நட்டம் யாதென்பதை வெவ்வேறாகவும்;
      (ii) கடந்த 10 வருடங்களில் சமுர்த்தி வங்கியின் ஐந்தொகைப் பெறுமதி யாதென்பதை வெவ்வேறாகவும்;
      (iii) சமுர்த்தி வங்கியின் பங்குதாரர்கள் யார் என்பதையும்;
      (iv) வைப்பாளர்களுக்குச் செலுத்தப்பட்ட வட்டி வீதம் மற்றும் சமுர்த்தி வங்கியினால் சீரமைக்கப்பட்டவாறு கடன் பெறுநர்களுக்கான கடன் வீதம் வெவ்வேறாக யாதென்பதையும்;
      அவர் இச்சபைக்கு மேலும் அறிவிப்பாரா?
      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-25

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks