E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0320/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன், பா.உ.

    1. 320/2024

      கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன்,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவானது, 1989 இல் உப மாவட்ட செயலகப் பிரிவாக தாபிக்கப்பட்டதன் பின்னர் 1993.03.17ஆம் திகதிய 93/600/034 ஆம் இலக்க மற்றும் 1993.03.31 ஆம் திகதிய 93/600/034(I) ஆம் இலக்க அமைச்சரவை நிருபங்கள் மற்றும் 1993.07.09 ஆம் திகதிய அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 1993.09.28 ஆம் திகதிய அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஒரு பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்பட்டது ௭ன்பதையும்;

      (ii) அதற்கமைய, 34 வருடங்களுக்கும் மேலாக அது ஒரு சுயாதீனமான பிரதேச செயலகமாக இயங்கி வருகின்றதென்பதையும்;

      (iii) கல்முனை - வடக்கு (தமிழ்ப் பிரிவு) பிரதேச செயலகத்தை, கல்முனை -தெற்கு பிரதேச செயலகத்தின் ஓர் உப அலுவலகமாகத் தரமிறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேலே (அ)(iii) இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தரமிறக்குவதற்கு அமைச்சரவை தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படுமா என்பதையும்;

      (iii) இன்றேல், இத்தகைய தரமிறக்கத்தின் அடிப்படை யாதென்பதையும்;

      (iv) அமைச்சரவைத் தீர்மானத்தை விஞ்சி, பிரதேச செயலகமொன்றை, உப பிரதேச செயலகமொன்றாகத் தரமிறக்குவதற்கு ஓர் அமைச்சின் செயலாளருக்கு / அரச அலுவலரொருவருக்கு இயலுமையுள்ளதா என்பதையும்;

      (v) ஆமெனில், அதன் சட்டபூர்வத்தன்மை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-22

கேட்டவர்

கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன், பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks