E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0327/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அசித நிரோஷண எகொட வித்தான, பா.உ.

    1. 327/2024

      கௌரவ அசித நிரோஷண எகொட வித்தான,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு வசமிருந்த கடுவலை, கொத்தலாவல கிராம அலுவலகர் பிரிவில் 'பட்டுத் தொழிற்சாலை' அமைந்திருந்த காணியிலிருந்து வ/ப தர்மாயதன பாதுகாப்புச் சபைக்கும் ஏனைய தரப்பினருக்கும் காணித் துண்டுகள் விடுவிக்கப்பட்டுள்ளனவா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) விடுவிக்கப்பட்டுள்ள காணித் துண்டுகள் தவிர்ந்த எஞ்சியுள்ள காணியிலிருந்து குடியிருப்புகளை அமைப்பதற்காக கையுதிர்க்கப்பட்ட காணித் துண்டுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) வீதிகள் மற்றும் ஒதுக்குப் பிரதேசங்கள் நிமித்தம் ஒதுக்கப்பட்டுள்ள காணித் துண்டுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) பொதுப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணித் துண்டுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iv) அத்தகைய ஒவ்வொரு காணித் துண்டினதும் விஸ்தீரணமானது, நில அளவீட்டு அலகுகளுக்கு ஏற்ப தனித்தனியாக யாதென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) மேலே (ஆ) இல் குறிப்பிடப்பட்டுள்ள காணிகள் கையுதிர்க்கப்பட்ட அடிப்படை மற்றும் காலகட்டம் யாதென்பதையும்;

      (ii) அச்சந்தர்ப்பத்தில் பர்ச் ஒன்றின் பெறுமதியும் தற்போதைய பர்ச் ஒன்றின் பெறுமதியும் தனித்தனியே யாதென்பதையும்;

      (iii) மேலே (ஆ)(ii)இல் குறிப்பிடப்பட்டுள்ள காணித் துண்டுகள் அடையாளமிடப் பட்டுள்ள காணி வரைபடத்தை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (iv) பொதுப் பணிகளுக்கான காணித் துண்டுகள் இன்றளவில் எத்தகைய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும்;

      அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-22

கேட்டவர்

கௌரவ அசித நிரோஷண எகொட வித்தான, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks