பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
327/2024
கௌரவ அசித நிரோஷண எகொட வித்தான,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு வசமிருந்த கடுவலை, கொத்தலாவல கிராம அலுவலகர் பிரிவில் 'பட்டுத் தொழிற்சாலை' அமைந்திருந்த காணியிலிருந்து வ/ப தர்மாயதன பாதுகாப்புச் சபைக்கும் ஏனைய தரப்பினருக்கும் காணித் துண்டுகள் விடுவிக்கப்பட்டுள்ளனவா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) விடுவிக்கப்பட்டுள்ள காணித் துண்டுகள் தவிர்ந்த எஞ்சியுள்ள காணியிலிருந்து குடியிருப்புகளை அமைப்பதற்காக கையுதிர்க்கப்பட்ட காணித் துண்டுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) வீதிகள் மற்றும் ஒதுக்குப் பிரதேசங்கள் நிமித்தம் ஒதுக்கப்பட்டுள்ள காணித் துண்டுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) பொதுப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணித் துண்டுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) அத்தகைய ஒவ்வொரு காணித் துண்டினதும் விஸ்தீரணமானது, நில அளவீட்டு அலகுகளுக்கு ஏற்ப தனித்தனியாக யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மேலே (ஆ) இல் குறிப்பிடப்பட்டுள்ள காணிகள் கையுதிர்க்கப்பட்ட அடிப்படை மற்றும் காலகட்டம் யாதென்பதையும்;
(ii) அச்சந்தர்ப்பத்தில் பர்ச் ஒன்றின் பெறுமதியும் தற்போதைய பர்ச் ஒன்றின் பெறுமதியும் தனித்தனியே யாதென்பதையும்;
(iii) மேலே (ஆ)(ii)இல் குறிப்பிடப்பட்டுள்ள காணித் துண்டுகள் அடையாளமிடப் பட்டுள்ள காணி வரைபடத்தை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iv) பொதுப் பணிகளுக்கான காணித் துண்டுகள் இன்றளவில் எத்தகைய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும்;
அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-01-22
கேட்டவர்
கௌரவ அசித நிரோஷண எகொட வித்தான, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks