E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0381/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.

    1. 381/2025

      கௌரவ ரோஹித்த அபேகுணவர்தன,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாகாணத்திற்கமைவாக வெவ்வேறாக யாதென்பதையும்;

      (ii) அத்தகைய ஒவ்வொரு பாடசாலையிலும் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் கல்வி சாரா பணியாட்டொகுதி ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iii) இலங்கையிலுள்ள மாகாண சபை பாடசாலைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாகாணத்திற்கமைவாக வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iv) அத்தகைய ஒவ்வொரு பாடசாலையிலும் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் கல்வி சாரா பணியாட்டொகுதி ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (v) கடந்த அரசாங்கத்தினால் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டுள்ள மாகாண சபை பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (vi) அத்தகைய பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-08

கேட்டவர்

கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks