E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0382/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.

    1. 382/2025

      கௌரவ ரோஹித்த அபேகுணவர்தன,— கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இன்றளவில் பணிபுரிகின்ற சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்களின் எண்ணிக்கை மற்றும் அந்தப் பதவியில் தற்போது காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (ii) அத்தகைய வெற்றிடங்களுக்கு புதிய அலுவலர்கள் நியமிக்கப்படுவார்களா என்பதையும்;

      (iii) இன்றளவில் பணிபுரிகின்ற சமுர்த்தி முகாமையாளர்களின் எண்ணிக்கை மற்றும் பதில் கடமை புரிகின்ற சமுர்த்தி முகாமையாளர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iv) தற்போது ஓய்வு பெற்றுள்ள சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்களினதும் சமுர்த்தி முகாமையாளர்களினதும் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (v) இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறதா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்களினதும் சமுர்த்தி முகாமையாளர்களினதும் பணிப்பொறுப்பு சமமானதா என்பதையும்;

      (ii) சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்களுக்கும் சமுர்த்தி முகாமையாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்குவதற்கான வழிமுறை காணப்படுகிறதா என்பதையும்;

      (iii) ஆமெனில், அவ்வழிமுறை வெவ்வேறாக யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) இதுவரை தாபிக்கப்பட்டுள்ள சமுர்த்தி வங்கிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) சமுர்த்தி இயக்கம் தொடர்பில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் யாவையென்பதையும்;

      என்பதை அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-15

கேட்டவர்

கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.

அமைச்சு

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks