E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0422/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சந்திம ஹெட்டிஆரச்சி, பா.உ.

    1. 422/2025

      கௌரவ சந்திம ஹெட்டிஆரச்சி,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) களுத்துறை மாவட்டத்திலுள்ள, மாகாண சபைக்குச் சொந்தமான மருத்துவமனைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) அந்த மாவட்டத்தில், மருத்துவமனை சேவை அல்லாத வேறு சுகாதார சேவைகளை வழங்கும் நிலையங்கள்/நிறுவனங்களை மாகாண சபை கொண்டுள்ளதா என்பதையும்;

      (iii) ஆமெனில், அந்த நிலையங்கள்/நிறுவனங்கள் யாவையென்பதையும்;

      (iv) களுத்துறை மாவட்டத்தில் காணப்படும் நிரல் அமைச்சுக்குச் சொந்தமான மருத்துவமனைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (v) அந்த மாவட்டத்தில், மருத்துவமனை சேவை அல்லாத வேறு சுகாதார சேவைகளை வழங்கும் நிலையங்கள்/நிறுவனங்களை நிரல் அமைச்சு கொண்டுள்ளதா என்பதையும்;

      (vi) ஆமெனில், அந்த நிலையங்கள்/நிறுவனங்கள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேலே (அ)(ii) மற்றும் (v)இல் குறிப்பிடப்பட்டுள்ள நிலையங்கள்/நிறுவனங்களில் தொற்றாத நோய்களுக்கான சிகிச்சை பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (ii) ஆமெனில், அவற்றின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) அவை நிறுவப்பட்டுள்ள இடங்கள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-20

கேட்டவர்

கௌரவ சந்திம ஹெட்டிஆரச்சி, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks