E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0431/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தனுஷ்க ரங்கனாத், பா.உ.

    1. 431/2025

      கௌரவ தனுஷ்க ரங்கநாத்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) களுத்துறை மாவட்டத்தில் 'ஐ-ரோட்' கருத்திட்டத்தின் கீழ் KL-2 கருத்திட்டம் (களுத்துறை பெகேஜ் 2) என்ற பெயரில் ஒரு கருத்திட்டம் இருந்ததென்பதையும்;

      (ii) சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் சட்ட நடவடிக்கை மேற்கொண்டதன் விளைவாக மேற்படி கருத்திட்டமானது இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும்;

      (iii) இதன் காரணமாக அப்பிரதேச மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி கருத்திட்டத்தின் கீழ் அகலவத்தை மற்றும் மத்துகம தேர்தல் தொகுதிகளில் அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த வீதிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேற்படி கருத்திட்டத்துடன் தொடர்புடைய ஒப்பந்த நிறுவனம்/நிறுவனங்கள் யாதென்பதையும்;

      (iii) அந்த நிறுவனத்தின்/நிறுவனங்களின் உரிமையாளர்கள் யாவரென்பதையும்;

      (iv) மேற்படி சட்ட நடவடிக்கைகளின் தற்போதைய நிலை யாதென்பதையும்;

      (v) மேற்படி கருத்திட்டத்தை பூர்த்திசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-22

கேட்டவர்

கௌரவ தனுஷ்க ரங்கனாத், பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks