E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0446/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ஒஷானி உமங்கா, பா.உ.

    1. 446/2025

      கௌரவ (திருமதி) ஒஷானி உமங்கா,— கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் புதிய கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அத் திட்டங்கள் யாவை என்பதையும்;

      (iii) கைத்தொழில் பேட்டைகளில் குத்தகை அடிப்படையில் கைத்தொழில்களை நிறுவுகையில், பல்வேறு நிறுவனங்களிடமிருந்து அங்கீகாரத்தை பெறுவதற்கு முதலீட்டாளர்களுக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

      (iv) ஆமெனில், மேற்படி குத்தகை உடன்படிக்கைகளை தயாரிக்கும் செயற்பாடுகளில் காணப்படும் தேவையற்ற தாமதத்தை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (v) சம்பந்தப்பட்ட சகல நிறுவனங்களையும் இணைத்து இலகுவான செயன்முறையொன்றை தயாரிப்பதற்கான இயலுமை உள்ளதா என்பதையும்;

      (vi) ஆமெனில், மேற்படி செயன்முறையை தயாரிப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்;

      அவர் தொிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-24

கேட்டவர்

கௌரவ (திருமதி) ஒஷானி உமங்கா, பா.உ.

அமைச்சு

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks