E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0481/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பா.உ.

    1. 481/2025

      கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அரபுக் கல்லூரிகள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி அரபுக் கல்லூரிகளுக்கென பொதுப் பாடநெறியொன்று இல்லாததுடன், ஒவ்வோர் கல்லூரியிலும் வெவ்வேறு பாடநெறிகள் கற்பிக்கப்படுவதை அறிவாரா என்பதையும்;

      (iii) மேற்படி அரபுக் கல்லூரிகளுக்கென பொதுப் ​பாடநெறியொன்றை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iv) ஆமெனில், அதற்கான வேலைத்திட்டம் யாதென்பதையும்;

      (v) மேற்குறிப்பிட்ட பொதுப் பாடநெறியை மற்றும் விரும்பிய வேறு ஏதேனும் பாடமொன்றை பயில்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-04

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பா.உ.

அமைச்சு

புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks