E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0498/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி அநுராத ஜயரத்ன, பா.உ.

    1. 498/2025

      கௌரவ அனுராத ஜயரத்ன,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2024 ஆம் ஆண்டில் வன விலங்குகளால் ஏற்படுத்தப்பட்ட பயிர்ச் சேதங்களின் அளவு யாதென்பதையும்;

      (ii) அதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நட்டம் யாதென்பதையும்;

      (iii) வன விலங்குகளால் ஏற்படுத்தப்படும் பயிர்ச் சேதங்களை குறைப்பதற்கு இன்றளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) பயிர்ச் செய்கைகளைப் பாதுகாப்பதற்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேற்படி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டா ஒன்றின் விலை ரூ.450/- ஆக காணப்படுவதை அறிவாரா என்பதையும்;

      (iii) அதன் காரணமாக விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளமையை அறிவாரா என்பதையும்;

      (iv) ஆமெனில், அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-18

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி அநுராத ஜயரத்ன, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks