E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0509/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உபுல் கித்சிறி, பா.உ.

    1. 509/2025

      கௌரவ உபுல் கித்சிறி,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தை அண்மித்ததாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ​வளவை கங்கைக்குக் குறுக்காக லியன்கஸ்தொட்ட பாலம் நிர்மாணிக்கப் பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;

      (ii) மேற்படி பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி மற்றும் நிறைவுசெய்யப்படவிருந்த திகதி வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iii) மேற்படி பாலத்திற்கான மதிப்பீட்டுப் பெறுமதி எவ்வளவு என்பதையும்;

      (iv) அப்போது குறித்த பாலத்தை நிர்மாணிப்பதற்குப் பொறுப்பாக செயற்பட்ட அமைச்சு/நிறுவனம் யாது என்பதையும்;

      (v) பாலம் நிர்மாணிக்கப்பட்ட காலப்பகுதியில் குறித்த அமைச்சுக்குப் பொறுப்பாக இருந்ந அமைச்சர் யாரென்பதையும்;

      (vi) இன்றளவில் மேற்படி பாலத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளனவா என்பதையும்;

      (vii) மேற்படி பாலத்தின் நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டிருப்பின், அதன் காரணமாக நாசமடைந்துள்ள பொருட்கள் யாவை என்பதையும்;

      (viii) அவற்றின் பெறுமதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-11

கேட்டவர்

கௌரவ உபுல் கித்சிறி, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks