E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0552/ 2025 - கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 552/2025
      கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— டிஜிட்டல் பொருளாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இலங்கைப் பிரசைகளுக்காக டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படுமா என்பதையும்;
      (ii) டிஜிட்டல் அடையாள அட்டையைப் பயன்படுத்துவதன் நன்மைகள் யாவை என்பதையும்;
      (iii) அந்த அடையாள அட்டையைத் தயாரிப்பதன் செயன்முறை யாது என்பதையும்;
      (iv) ஒரு அடையாள அட்டையைத் தயாரிப்பதற்குச் செலவாகும் தொகை எவ்வளவு என்பதையும்;
      (v) ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள அனைத்து இலங்கைப் பிரசைகளுக்கும் அந்த அடையாள அட்டையைத் தயாரிப்பதற்குச் செலவாகும் மொத்தத் தொகை எவ்வளவு என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படுவதற்கு நிதி பெறப்படும் விதம் யாதென்பதையும்;
      (ii) அதற்காக வெளிநாட்டுக் கடன் அல்லது உதவி பெறப்படுமாயின், அக்கடன்/உதவியை வழங்கும் நாடுகள் அல்லது நிறுவனங்கள் யாவை என்பதையும்;
      (iii) அந்த அடையாள அட்டையைத் தயாரிக்கும் செயன்முறையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் அனுகூலங்கள் யாவை என்பதையும்;
      (iv) அந்த முதலீட்டாளர்களால் தனிப்பட்டவர்களின் தரவுகளைப் பெற முடியாது என்பது உறுதியளிக்கப்படுமா என்பதையும்;
      (v) டிஜிட்டல் அடையாள அட்டையைத் தயாரிக்கும் செயன்முறை தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களும் சபையில் சமர்ப்பிக்கப்படுமா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-10

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks