E   |   සි   |  

 திகதி: 2025-09-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1265/ 2025 - கௌரவ அசோக குணசேன, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1265/2025
      கௌரவ அசோக குணசேன,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) பொல்கஹவெல, பொத்துஹெர, அளவ்வ குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகிக்கப்படவுள்ள பிரதேசங்கள் யாவை;
      (ii) இத்திட்டத்தில் உள்வாங்கப்படாத பொல்கஹவெல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பிரதேசங்கள் யாவை;
      (iii) தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டினால் இன்னலுக்கு உள்ளாகியுள்ள பொல்கஹவெல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள, 13 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 2500இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேற்படி குடிநீர் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்பதை அவர் அறிவாரா;
      (iv) இதற்கான காரணங்கள் யாவை;
      (v) இக்குடிநீர் திட்டத்தின் பூர்வாங்கத் திட்டத்தில் மேற்படி கிராம அலுவலர் பிரிவு களுக்கும் குடிநீரை விநியோகிப்பதற்கு ஏற்கனவே முன்மொழியப்பட்டிருந்த வேலைத் திட்டம் பின்னர் மாற்றம் செய்யப்பட்டதா;
      (vi) அதற்கான காரணங்கள் யாவை;
      என்பதை அவர் குறிப்பிடுவாரா?
      (ஆ) (i) 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் மேற்படி குடிநீர் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறான நோக்கங்களுக்காக செலவிடப்படும்;
      (ii) இதன் மூலம் அ(iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுமா;
      (iii) மேற்படி குடிநீர் திட்டத்தை தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை பொறுப்பேற்றுள்ளதா;
      (iv) ஆமெனின், மேற்படி குடும்பங்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
      (v) மேற்படி குடிநீர் திட்டத்தில் வீரம்புகெதர பிரதேச செயலகப் பிரிவு உள்வாங்கப்படாமைக்கான காரணங்கள் யாவை;
      என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-23

கேட்டவர்

கௌரவ அசோக குணசேன, பா.உ.

அமைச்சு

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks