E   |   සි   |  

 திகதி: 2025-10-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1320/ 2025 - கௌரவ (திருமதி) ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1320/2025
      கௌரவ (திருமதி) ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இலங்கை மகாவலி அதிகார சபையினால் தொலைபேசி கம்பனிகளுக்கு மகாவலி - சீ வலயத்தின், தெஹிஅத்தகண்டிய தொகுதியினுள் நிர்மாணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
      (ii) அதற்காக அரச காணிகள் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பின், அக்காணிகள் வழங்கப்பட்ட நடைமுறை யாது என்பதையும்;
      (iii) தனி நபரொருவருக்கு கையுதிர்க்கப்பட்டுள்ள அரச காணியொன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கோபுரத்துடன் தொடர்புடைய காணித் துண்டின் பெறுமதிக்கு உரித்துக் கோருவதற்கு சம்பந்தப்பட்ட தனிநபருக்கு ஏதேனும் முறையொன்று உள்ளதா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) நவமெதகம தொகுதியில் கைத்தொழில் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணியின் ஒரு பகுதி பௌத்த நிலையமொன்றினை ஆரம்பிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
      (ii) ஆமெனில், மேற்படி காணித் துண்டின் விஸ்தீரணம் எவ்வளவு என்பதையும்;
      (iii) மேற்படி பௌத்த நிலையத்தின் நிர்மாணத்திற்காக ஒதுக்கப்பட்ட காணித் துண்டுக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட டயலொக் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு ஏதுவான குத்தகைப் பணம் முறையாக அறவிடப்பட்டுள்ளதா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-09

கேட்டவர்

கௌரவ (திருமதி) ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks