E   |   සි   |  

 திகதி: 2025-10-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1361/ 2025 - கௌரவ துரைராசா ரவிகரன், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1361/2025
      கௌரவ துரைராசா ரவிகரன்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) 2021 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களுக்கு ஆயுர்வேதம், சித்த மற்றும் யுனானி மருத்துவக் கல்வியைக் கற்பதற்காக இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
      (ii) ஆயுர்வேதம், சித்த மற்றும் யுனானி மருத்துவக் கல்வியைக் கற்று, உள்ளகப் பயிற்சியையும் நிறைவு செய்து, தற்பொழுது தொழிலை எதிர்பார்த்துள்ள வைத்தியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
      (iii) சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகளில் ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவர்ளுக்கான அனுமதிக்கப்பட்ட பணியாட்டொகுதியினர், தற்பொழுது சேவையாற்றும் பணியாட்டொகுதியினர் மற்றும் தற்பொழுது நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
      (iv) செயற்றிறன்மிக்க சுதேச மருத்துவ சேவையினைப் பெற்றுக் கொடுப்பதற்காக தற்பொழுது தொழில்வாய்ப்பற்ற சுதேச மருத்துவப் பட்டதாரிகளுக்கு அரசாங்க ஆயுர்வேத வைத்தியசாலைகளில் நியமனங்களை வழங்குவதில் உள்ள தடைகள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-23

கேட்டவர்

கௌரவ துரைராசா ரவிகரன், பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks