E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2801/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 2801/ ’12

      கெளரவ தயாசிறி ஜயசேகர,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் தலையீட்டுடன் கல்கமுவ பிரதேச செயலாளர் பிரிவில் பேணிவரப்படும் பழங்கள் ஏற்றுமதிக் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

      (ii) மேற்படி கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் யாதென்பதையும்;

      (iii) அதற்கான நிதி பெறப்பட்ட வழிமுறை யாதென்பதையும்;

      (iv) அதன் கீழ் பயன்பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (v) மேற்படி கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு தொடக்கம் இதுவரை ஒவ்வொரு பழ வகையின் வருடாந்த உற்பத்தி வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (vi) மேற்படி உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகள் யாவையென்பதையும்;

      (vii) மேற்படி நாடுகளுக்கு வருடாந்தம் ஏற்றுமதி செய்யப்படும் பழ வகைகள் மற்றும் அவற்றின் அளவு வெவ்வேறாக யாதென்பதையும்;

      (viii) தற்போது இந்தக் கருத்திட்டம் அடைந்துள்ள முன்னேற்றம் யாதென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-06-19

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-06-19

பதில் அளித்தார்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks