பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3656/ ’13
கௌரவ வசந்த அலுவிஹாரே,— சமூக சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மஹிந்த சிந்தனையின் 47 ஆம் பக்கத்தில் அங்கவீனரான வயோதிப சமுர்த்தி பெறுநர் ஒருவரைக் கொண்டுள்ள குடும்பத்திற்கு ரூபா 3000/- மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) மஹிந்த சிந்தனை தொலைநோக்கின் 193 ஆம் பக்கத்தின்படி இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும்;
(iii) மேற்படி கூற்றுக்களின் பிரகாரம், உரித்தாகின்ற கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கவீன நிலையிலுள்ள சமுர்த்தி நிவாரணம் பெறுகின்றவரான குருநாகல், பமுனாகொட்டுவ, கடிஹாரயவில் வசிக்கும் டபிள்யு.எம்.பீ.ஏ. வீரசேகர 2012.05.14 ஆம் திகதி பலவீனர்களுக்கான தேசிய செயலகத்திற்கு விண்ணப்பமொன்றைச் சமர்ப்பித்துள்ளார் என்பதையும்;
(iv) மேற்படி விண்ணப்பம் தற்போது காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) ரூபா 3000/- கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்கு 2012.05.21 ஆம் திகதியிலிருந்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள திரு. வீரசேகரவுக்கு மேற்படி கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-08-21
கேட்டவர்
கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.
அமைச்சு
சமூக சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-12-04
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks