E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4055/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.

    1. 4055/ ’13

      கௌரவ லக்ஷமன் கிரிஎல்ல,— நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் காணிகள் வழங்கப்பட்ட கண்டி குருதெனிய, ஹாரகம கிராம அலுவலர் பிரிவின் 3 ஆம் கொலணியிலுள்ள 130 வீடுகளில் வசிக்கின்ற மக்கள் 1983 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை குடிநீர் வசதிகள் இல்லாமை காரணமாக பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதையும்;

      (ii) தமது அன்றாட நுகர்வுக்காக நீரைப் பெற்றுக் கொள்வதற்கு இம்மக்கள் ஒன்றரைக் கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது என்பதையும்;

      (iii) நீர் வழங்கல் சபையின் மதிப்பீட்டுக்கு அமைய மேற்படி பிரதேசத்திற்கு நீர் வழங்கலைப் பெற்றுக் கொடுப்பதற்கான கருத்திட்டத்திற்கு ரூபா 36 மில்லியன் அவசியமாக உள்ளது என்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) மேற்படி கருத்திட்டத்திற்கு நிதியைப் பெற்றுக் கொடுத்து குறித்த பிரதேச மக்களுக்கு குடிநீர் வசதிகளைத் துரிதமாகப் பெற்றுக் கொடுக்கும் திகதி யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-10-09

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல், வடிகாலமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-09

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks