E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0309/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

    1. 309/ '15

      கௌரவ ஹேஷா விதானகே,— மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கொழும்பு, புறக்கோட்டைக்கு அண்மையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிதக்கும் வர்த்தக நிலையங்கள் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய நிறுவனம் யாது;

      (ii) இதற்காக செலவிடப்பட்ட பணத்தொகை யாது;

      (iii) மேற்படி பணத்தை ஈடுபடுத்திய நிறுவனம் யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களின் மொத்த எண்ணிக்கை யாது;

      (ii) வர்த்தகர்களுக்கு கையளிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கை யாது;

      (iii) தற்போது மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கை யாது;

      என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) மேற்படி கருத்திட்டத்தின் மூலம் அரசாங்கம் உழைக்கும் மாதாந்த மொத்த வருமானம் யாது;

      (ii) கருத்திட்டத்தினால் நஷ்டம் ஏற்படுகின்றதாயின், குறித்த மாதாந்த நஷ்டம் யாது;

      (iii) தற்போது இந்த கருத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா;

      (iv) தோல்விகண்டுள்ளதாயின், இதற்கு ஏதுவாயமைந்த காரணிகள் யாவை;

      (v) இந்த கருத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான உத்தேச வேலைத்திட்டமொன்று காணப்படுகின்றதா;

      (vi) ஆமெனில், குறித்த வேலைத்திட்டம் யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-01-27

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-01-27

பதில் அளித்தார்

கௌரவ லசந்த அலகியவன்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks