E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0686/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 686/ '16

      கௌரவ புத்திக பத்திறண,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) ரஹல் தெதஸ் நட்புறவு ஒன்றியத்தினால் மாத்தறை, கொட்டுவேகொட வர்த்தக நிலப் பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவிற்குரிய உபகரணங்கள் 2013.03.07 ஆம் திகதி இரவு காணாமல் போயுள்ளதென்பதையும்;

      (ii) இதுவரை அவ்வுபகரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லையென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) இச்சம்பவம் தொடர்பாக விசாரணையொன்று நடத்தப்படுகின்றதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அதன் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;

      (iii) விசாரணையை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (iv) ஆமெனில், அது எவ்வாறு என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-28

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks