E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0687/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 687/ '16

      கௌரவ புத்திக பத்திறண,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கைப் பொலீஸ் திணைக்களத்திடமுள்ள பாவனைக்குதவாத வாகனங்கள் தொடர்பாக தொகை மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அவ்வாகனங்களின் மொத்தப் பெறுமதி யாதென்பதையும்;

      (iii) இன்றேல், தொகை மதிப்பீடொன்றை மேற்கொள்வாரா என்பதையும்;

      (iv) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) பொலீஸ் திணைக்களத்திற்குரிய பாவனைக்குதவாத வாகனங்கள் இறுதியாக ஏலவிற்பனை செய்யப்பட்ட திகதி யாதென்பதையும்;

      (ii) அந்த ஏலவிற்பனையின் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானம் யாதென்பதையும்;

      (iii) மீண்டும் ஏலவிற்பனையொன்று நடத்தப்படுமா என்பதையும்;

      (iv) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-29

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks