E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0709/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ச. வியாழேந்திரன், பா.உ.

    1. 709/ '16

      கௌரவ எஸ். வியாழேந்திரன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (4)

      (அ) 2015 சனவரி மாதம் 08 ஆம் திகதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை கல்வி அமைச்சில் சிற்றூழியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி நியமனங்கள் வழங்கப்படுகையில் பரிசீலிக்கப்பட்ட தகைமைகள் யாவை என்பதையும்;

      (ii) அவ்வாறு எத்தனை நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும்;

      (iii) மேற்படி நியமனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்துக்கமைய வெவ்வேறாக யாவை என்பதையும்;

      (iv) மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள தமிழ் சிற்றூழியர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-08-12

கேட்டவர்

கௌரவ ச. வியாழேந்திரன், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-03-21

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks