E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1037/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

    1. 1037/ '16

      கௌரவ இந்திக்க அனுருத்த ஹேரத்,— வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (​i) புலம்பெயர் வள நிலையங்களை தாபிப்பதற்கென 2016 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட ரூபா 400 மில்லியன் தொகையில் இன்றளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள மாவட்டங்களும் இடங்களும் வெவ்வேறாக யாவை என்பதையும்;

      (iii) இந் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வளங்கள் யாவை என்பதையும்;

      (iv) மேற்படி நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (v) அவற்றின் மூலம் சேவைகள் வழங்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) இக்கருத்திட்டத்தின் காரணமாக வெளிநாட்டு தொழில்களை நாடும் ஆட்களின் தரம் அதிகரித்துள்ள விதம் யாதென்பதையும்;

      (ii) இக்கருத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகள் பூர்த்திசெய்யப் பட்டுள்ளனவா என்பதையும்;

      (iii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-02-22

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks