E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2198/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

    1. 2198/ '17

      கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களின் பெருந்தோட்டங்களில் பஸ்வண்டிகள் செல்கின்ற கிராமிய பாதைகளை காபட் இடுவதற்கு அல்லது தார் இட்டு அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அதற்காக ஒதுக்கப்பட்டிருந்த பணத்தொகை எவ்வளவென்பதையும்;

      (iii) அதன் மூலம் நிர்மாணிக்கப்படும் வீதிகள் பற்றிய பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (iv) எதிர்வரும் காலத்தில் பெருந்தோட்டங்களிலுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-12-07

கேட்டவர்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks