E   |   සි   |  

2025 நவம்பர் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : இன்றைய குழுநிலை விவாதத்திற்கான நேர ஒதுக்கீடு
2 : “பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான சர்வதேச செயற்பாட்டை” முன்னிட்டு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான அடையாளச்சின்னம்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி   -   மூன்று மனுக்கள் 
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலங்க யூ. கமகே
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i) ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2026) - குழு (ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வருவன சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(ii)    இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை (2021)
(iii)    வ.ப சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஆண்டறிக்கை (2022)


அதனையடுத்து, 1858 மணியளவில் பாராளுமன்றமானது 2025 நவம்பர் 24ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks