07

E   |   සි   |  

2024-06-28

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

சமாதான நீதவான்களுக்கான நடத்தைக் கோவை அடங்கிய ஒழுங்குவிதிகளுக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி

சமாதான நீதவான்களை நியமித்தல், இடைநிறுத்துதல், இரத்துச் செய்தல் மற்றும் நடத்தைக் கோவை அடங்கிய 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தின் கீழ் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்ட இரண்டு ஒழுங்குவிதிகளுக்கு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் (ஜூன் 18) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

சமாதான நீதவான்களுக்கிடையே உயர் தரத்திலான தார்மீக மற்றும் ஒழுக்கவியல் நடத்தையை ஊக்குவித்தல் மற்றும் ஊழல் செயல்முறைகளுக்கான வாய்ப்புக்களை இல்லாதொழித்தல் என்பவற்றின் மூலம் வினைத்திறனான நீதி நிருவாகத்தை வலுப்பெறச்செய்தல் இந்த நடத்தைக் கோவையின் குறிக்கோளாகும்.

சமாதான நீதவான்களை நியமிப்பதற்கான முறைமை மற்றும் அவர்களின் தகைமைகள் தொடர்பில் இதுவரை குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என நீதி அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். அத்துடன், அந்தப் பதவியை முறைகேடாகப் பயன்படுத்தும் போது அந்த நபர்களை சமாதான நீதவான் பதவியிலிருந்து இரத்துச் செய்வதற்கு உரிய முறைமையொன்று காணப்படாமை காரணமாக இந்த ஒழுங்குவிதிகள் வெளிப்பட்டதாக அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ இங்கு மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இந்தப் பதவியின் கௌரவம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையினை பாதுகாக்கும் நோக்கில் சமாதான நீதவான்கள் பின்பற்றவேண்டிய நடத்தைக் கோவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு மேலதிகமாக, சிவில் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை, வீட்டு வாடகை சட்டத்தை நீக்குதல் சம்பந்தமாக முன்வைக்கப்படவுள்ள சட்டமூலம் மற்றும் குடியிருப்பாளர்களை பாதுகாப்பது தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள சட்டமூலம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (சட்டத்தரணி) தலதா அத்துகோரல, கௌரவ (சட்டத்தரணி) ரவுப் ஹக்கீம், கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ முதிதா பிரிஸான்தி, கௌரவ தவராஜா கலை அரசன் மற்றும் கௌரவ மஞ்சுளா திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1

 



தொடர்புடைய செய்திகள்

2024-09-09

சிறுவர்களின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால,...


2024-09-06

2024 சிறு போகத்தில் சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை உணவுப் பாதுகாப்பு மற்றும்...

சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட நெல் விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்கு கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி உணவுப்...


2024-08-22

பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த அறிக்கை சபாநாயருக்குக் கையளிப்பு

பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த ஆய்வு அறிக்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி...


2024-08-16

காலதாமதமடைந்துள்ள சியம்பலாண்டுவ சூரிய சக்தி பூங்காவின் கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த வலுசக்தி மற்றும் போக்குவரத்துப் பற்றிய துறைசார் மேற்பார்வைக்...

கட்டுமானம் தாமதமாவதால் நாளொன்றுக்கு 19 மில்லியன் ரூபா இழப்பு - இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை குழுவிடம் தெரிவிப்பு நிறைவேற்றுத்தர...






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks