07

E   |   සි   |  

அரசாங்கச் சட்டமூலங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:-

  1. சாதாரண சட்டமூலங்கள்
  2. அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலங்கள் - (அரசியலமைப்பின் 82, 83 மற்றும் 84 ஆம் உறுப்புரைகளின் பிரகாரம் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான, நீக்குவதற்கான மற்றும் மாற்றீடு செய்வதற்கான சட்டமூலங்கள்)
  3. ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

பாராளுமன்ற நடைமுறை

அரசியலமைப்பின் 78ஆம் உறுப்புரையின் பிரகாரம், சட்டமூலமானது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதிலிருந்து 07 நாட்களிற்கு பின்னர் 50(1) ஆம் நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளிற்கமைய எவரேனும் அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் முதலாம் மதிப்பீட்டிற்காக ஒழுங்குப் பத்திரத்தில் இடப்படும்.

ஆயினும், மாகாண சபை நிரலிலுள்ள விடயத்துடன் தொடர்புபட்ட சட்டமூலமானால், அச்சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பின்னரும், பாராளுமன்றத்தில் முதலாம் மதிப்பீட்டிற்கு முன்னரும் சனாதிபதியால் மாகாண சபைகளிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டும்.

முதலாம் மதிப்பீட்டின் பின்னர், சட்டமூலம் அச்சிடப்படுவதற்கு கட்டளையிடப்படுவதுடன் அச்சட்டமூலம் பிரேரணை ஏதுமின்றி உரிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு பரிசீலனைக்காக ஆற்றுப்படுத்தப்படும்.

50(1) மற்றும் 55(1) ஆம் இலக்க நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகளிற்கமைய முதலாம் மதிப்பீட்டிலிருந்து பதின்நான்கு நாட்களிற்கு பின்னர் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டிற்காக ஒழுங்குப் பத்திரத்தில் இடப்படுதல் வேண்டும். இரண்டாம் மதிப்பீட்டுத் திகதி பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் தீர்மானிக்கப்படுகின்றது.

துறைசார் மேற்பார்வைக் குழுவானது சட்டமூலம் தொடர்பிலான தனது அறிக்கையை இரண்டாம் மதிப்பீட்டுக்கு முன்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

எவ்வாறாயினும் பின்வரும் சந்தர்ப்பங்களில் இரண்டாம் மதிப்பீட்டானது முதலாம் மதிப்பீட்டு திகதியிலிருந்து ஏழு நாட்களின் பின்னர் இடம்பெறமாட்டாது:-

57ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் முழுப் பாராளுமன்ற குழுவுக்கு சட்டமூலமொன்று ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் 93 தொடக்கம் 99 வரையான நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் குழுவின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குழுநிலையில் சட்டமூலத்தின் அனைத்து வாசகங்களும் பரிசீலிக்கப்படுவதோடு, 60 தொடக்கம் 65வரையான நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் புதிய திருத்தங்கள் சட்டமூலத்தின் வாசகங்களிற்கு பிரேரிக்கப்படலாம். சட்டமூலத்திற்கு புதிய வாசகங்களும் புதிய அட்டவணைகளும் பிரேரிக்கப்படும் பட்சத்தில் 66(1),மற்றும் 66(2) ஆம் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் அவை முதல் மதிப்பீடு பெற்றவையாக கருதப்பட்டு அதன் பின்னர் அத்தகைய வாசகங்களும் அட்டவணைகளும் “இரண்டாம் மதிப்பீடு பெறுமாக” மற்றும் சட்டமூலத்துடன் சேர்க்கப்படுவதாக எனும் பிரேரணைகள் பிரேரிக்கப்படும்.(66(1), 66(2) நிலையியற் கட்டளைகள்) அதன் பின்னர் சட்டமூலத்தின் முன்னுரையும், சட்டப்பெயரும் முறையே 66(3), 66(4) நிலையியற் கட்டளை இன் பிரகாரம் பிரிசீலிக்கப்படும்.

திருத்தங்களிற்கான விதிகள் 43 முதல் 46 வரையான நிலையியற் கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அனைத்து திருத்தங்களும் எழுத்து மூலமாக அமைந்திருக்க வேண்டுமென்பதோடு, 43(2) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கையளிக்கப்படுதல் வேண்டும்.

சட்டமூலம் விசேட குழுவொன்றிற்க்கு அல்லது நிலையியற் குழுவிற்க்கு அல்லது துறைசார் மேற்பார்வை குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கின்றபோது 58 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு, குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை மேலதிக நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது.

குழுவின் அறிக்கை 68, 69 மற்றும் 70 நிலையியற் கட்டளையின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

சட்டமூலம் பிரேரணை ஒன்றின் மேல் மூன்றாவது முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு 71 மற்றும் 72 நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் நிறைவேற்றப்படும். மூன்றாம் மதிப்பீட்டிலும் வாக்கெடுப்புபொன்று இடமபெறும். வாக்கெடுப்பானது 47 ஆம் நிலையியற் கட்டளைக்கு இணங்க குரல் மூலமாகவோ, வரிசை வரிசையாகவோ, இலத்திரனியல் வாக்கு பதிகருவியை பயன்படுத்தி பெயர்களை அழைப்பதன் மூலமாகவோ இடம்பெறலாம்.

74 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் அரசியலமைப்பின் உறுப்புரைகள் 79 மற்றும் 80 இன் கீழ் சட்டமூலமானது (மூலப்பிரதி) சாபாநாயகரினால் புறக்குறிப்பீடு செய்யப்படுவதன் பேரில் சட்டமூலமொன்று சட்டமாக மாறும்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks