E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0673/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சாரதீ துஷ்மந்த, பா.உ.

    1. 673/ '19

      கௌரவ எச்.ஆர்.சாரதி துஷ்மந்த,— கமத்தொழில், கிராமிய பொருளாதார, கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) நீர்ப்பாசன அமைச்சின் கீழ் CRI என்ற கருத்திட்டமொன்று உலக வங்கி நிதியுதவியுடன் செயற்படுத்தப்படுகின்றதா என்பதையும்;

      (ii) இக்கருத்திட்டத்தின் கீழ் தற்சமயம் முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;

      (iii) மேற்படி கருத்திட்டங்களில் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வீ ஓயா கருத்திட்டத்தின் முன்னேற்றம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) CRI கருத்திட்டத்தின் கீழ் தெரனியகல பிரதேச செயலகப் பிரிவில் அல்லது தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவில் ரூகாசல் என்ற கருத்திட்டத்தின் முன்னேற்றம் யாதென்பதையும்;

      (ii) இக்கருத்திட்டத்தின் திட்டவரைவை இச்சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (iii) மேற்படி கருத்திட்டத்தினால் தெரனியகல நகர் நீரில் மூழ்குமா என்பதையும்;

      (iv) இக்கருத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட தொகை எவ்வளவென்பதையும்;

      (v) இத்தொகை மதிப்பீட்டையும் திட்டவரைவையும் இச்சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-19

கேட்டவர்

கௌரவ சாரதீ துஷ்மந்த, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-03-19

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks