E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1823/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 1823/ ’11

       

      கெளரவ புத்திக பத்திரண,—  பெற்றோலியக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      மாத்தறை மாவட்டத்தில் திஹகொட பிரதேச  செயலாளர் பிரிவில் வதியும் திரு. ஹென்றி நெல்ஸன்  ரத்னாயக்க  திஹகொட சந்தியில் எரிபொருள்  நிரப்பும் நிலையமொன்றை நடாத்தி வருகின்றார் என்பதையும்;

                 (ii)     இந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பெற்றோல் விற்பனைக்காக பல தடவைகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் அனுமதி கோரிய போதிலும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்பதையும்

      அவர் அறிவாரா

      (ஆ) (i) இந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏனைய எரிபொருள்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கையில் பெற்றோல் விற்பனைக்கு அனுமதி வழங்காமைக்கான காரணம் யாது;

      (ii) திரு. நெல்ஸன் ரத்னாயக்கவுக்கு பெற்றோல் விற்பனைக்கான அனுமதியை வழங்க நடவடிக்கை எடுப்பாரா;

      (iii) அவ்வாறாயின் அத்திகதி யாது

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-07-05

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

பெற்றோலியக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-01-22

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ சரண குணவர்தன, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks