E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1953/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 1953/ ’11

      கெளரவ புத்திக பத்திரண,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக்  கேட்பதற்கு,—

      (அ)    (i)     காலி மாவட்டத்தின், அக்மீமன பிரதேசத்தின் தல்கம்பல கொனாமுல்ல வெவேகொட தேயிலைத் தொழிற்சாலை ஐந்து வருட காலமாக மூடப்பட்டுள்ளதென்பதையும்;

      (ii) இதன் காரணமாக பிரதேசத்தைச் சேர்ந்த சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்குத் தமது தேயிலைக் கொழுந்துகளை விற்பனை செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதென்பதையும்;

      (iii) மேற்படி தொழிற்சாலையில் ரூபா ஒரு கோடிக்கு அதிகமான பெறுமதியுடைய ஆதனங்கள் சேதமடைந்து வருகின்றதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி தேயிலைத் தொழிற்சாலை மூடப்பட்டமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      (ii) இவ்வாறான தேயிலைத் தொழிற்சாலையொன்றை அழிவதற்கு இடமளிப்பதானது பெரும் தவறாகும் என்பதால் அதன் உற்பத்திப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (iii) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-02-19

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-02-19

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த சமரசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks