E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2154/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 2154/ ’11

      கௌரவ தயாசிறி ஜயசேகர,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      2005 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை இலங்கை தேயிலைச் சபை ஈட்டிய இலாபம் அல்லது அடைந்த நட்டம் வருடாந்த அடிப்படையில் தனித்தனியே எவ்வளவென்பதையும்;

      (ii) தற்போது தேயிலைச் சபையில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iii) இவர்களது சம்பளம் செலுத்துவதற்கு மாதாந்தம் செலவிடப்படும் பணத் தொகை எவ்வளவென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) மேற்படி நிறுவனம் பேணிவரப்படும் இடத்தின் முகவரி யாதென்பதையும்;

      (ii) மேற்படி இடம் வாடகை, குத்தகை அல்லது நிரந்தர அடிப்படையில் பெறப்பட்டதா என்பதையும்;

      (iii) ஆமெனில், மேற்படி இடத்திற்காக மாதாந்தம் அல்லது வருடாந்தம் செலுத்தப்படும் வாடகைத் தொகை எவ்வளவென்பதையும்

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) இலங்கை தேயிலைச் சபைக்குரிய சொத்துக்கள் யாவை என்பதையும்;

      (ii) தற்போது மேற்படி நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாயிருப்பின் அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (iii) மேற்படி நிறுவனத்தை குத்தகைக்கு விடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2012-11-12

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2012-11-12

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த சமரசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks